February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா பலி 74 ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

கொழும்பு – 02 ஐச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர், கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்றிரவு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.