June 1, 2025 0:56:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வார இறுதி பயணிகள் ரயில் சேவைகள் இரத்து

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு வார இறுதி பயணிகள் ரயில் சேவைகளை ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளையும்,  நாளை மறுதினமும் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலவும் நிலையில் தேவையில்லாத பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளினால் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.