October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா: வைத்தியசாலையில் இருந்து தாய் பிள்ளையுடன் தப்பியோட்டம்

File Photo

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அங்கொட ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த  தாயொருவர் தனது இரண்டரை வயது மகனுடன் அங்கிருந்த தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எஹலியாகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய தாய், தனது மகனுடன் வைத்தியசாலையின் நான்காம் இலக்க விடுதியில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9.10 மணி முதல் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இவர்களை தேடி நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, இரண்டரை வயது மகன், எஹெலியகொட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகனை தனது வீட்டில் இருந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தாய் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பெண்ணை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 73ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மேலும் 4 பேர் நேற்று  உயிரிழந்துள்ளதாக சுகாதார ​சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்,

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 59 வயதான பெண்ணும், 86 வயதான ஆணும்,  கொழும்பு 10 மற்றும் 15 பிரதேசங்களை சேர்ந்த 70 வயது ஆணொருவரும், 27 வயது யுவதியொருவரும் இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.