
2022 ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்து இலங்கை அணி சம்பியாகியுள்ளது.
சிங்கப்பூரில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதின.
இதன்போது இலங்கை அணி 63 – 53 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கபூர் அணியை தோற்கடித்து சம்பியனாகியது.
இதன்மூலம் இலங்கை அணி, உலக சம்பியன் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது.
இதன்படி இலங்கை அணி 6 ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இவ்வாறு சம்பியனாகியுள்ள இலங்கை அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Congratulations
Sri Lanka beat Singapore (63-53) & wins the Asian Netball Championship & also qualify for the World Cup Netball Championship.pic.twitter.com/7W3rfUAFvc #LKA #SriLanka #Netball— Sri Lanka Tweet
(@SriLankaTweet) September 11, 2022