June 17, 2025 23:37:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறுதிப் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது!

2022 ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்து இலங்கை அணி சம்பியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதின.

இதன்போது இலங்கை அணி 63 – 53 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கபூர் அணியை தோற்கடித்து சம்பியனாகியது.

இதன்மூலம் இலங்கை அணி, உலக சம்பியன் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது.

இதன்படி இலங்கை அணி 6 ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இவ்வாறு சம்பியனாகியுள்ள இலங்கை அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.