October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகினார்!

File Photo

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகியுள்ளார்.

இதனையடுத்து அணியின் புதிய தலைவராக ஜடேஜா  நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 26 முதல் ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்லையில், ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி தலைவர் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.

அப்போது, அணி நிர்வாகம் டோனி தலைவராக செயல்படுவார் என்று முன்னர் அறிவித்திருந்தது.

ஆனால், இன்று டோனி தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதா அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

டோனி தலைவர் பதவியில் இருந்த விலகினாலும் அணியில் தொடர்ந்தும் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.