
Photo: Mahajana College Media
இம்மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசிய 19 வயதின் கீழ் பெண்கள் கால்பந்து தொடருக்கான இலங்கை குழாத்தில் யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இந்த கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கவுள்ளன.
இந்த நிலையில், தெற்காசிய கால்பந்து தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனைகளான சி.தர்மிகா, உ.யோகிதா, கிரிசாந்தினி, ம.வலன்ரீனா ஆகிய நால்வரும் இடம்பிடித்துள்ளனர்.
அத்துடன், தெற்காசிய 19 வயதின் கீழ் பெண்களுக்கான கால்பந்து தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் பொறுப்பாசிரியராக மகாஜனக் கல்லூரியின் பெண்கள் கால்பந்து அணியின் பொறுப்பாசிரியராக கடமையாற்றும் பத்மநிதி செல்லையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தெற்காசிய 19 வயதின் கீழ் பெண்களுக்கான கால்பந்து தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம், இன்று காலை பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.