July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல் 2021: ஜப்னா கிங்ஸ் அணிக்கு புதிய சுழல்பந்து வீச்சு பயிற்சியாளர்

இந்த ஆண்டு எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக, முன்னாள் இலங்கை வீரரும், தற்போதைய குவைத் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருமான  முதுமுதலிகே புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜப்னா அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக சச்சித் பத்திரன செயல்பட்டுவந்த போதும், அவர் தற்போது இலங்கை U19 அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றார்.

எனவே, சச்சித் பத்திரனவின் இடத்துக்கு முதுமுதலிகே புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜப்னா கிஙஸ் அணி இன்றைய தினம் (24)  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முதுமுதலிகே புஷ்பகுமாரவின் பயிற்றுவிப்பின் கீழ், குவைத் அணி மிகச்சிறந்த முன்னேற்றத்தை பெற்று வருகின்றது. இவர், 2019ஆம் ஆண்டிலிருந்து குவைத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றார்.

இவரது பயிற்றுவிப்பு காலப்பகுதியில், குவைத் அணி ஆசிய கிண்ணத்துக்கு தகுதி பெற்றிருந்ததுடன், ஆசிய மேற்கு பிராந்திய சம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது.

அதுமாத்திரமின்றி, முதுமுதலிகே புஷ்பகுமார இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கழகமான கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தலைமை பயிற்சியாளராக 9 ஆண்டுகள் செயற்பட்டுள்ள அனுபவத்தையும் கொண்டுள்ளார்.

எனவே, முதுமுதலிகே புஷ்பகுமாரவின் பயிற்றுவிப்பின் கீழ், ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.