July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – மே.தீவுகள் முதல் டெஸ்ட: 3 ஆவது நாள் ஆட்டம் மழையினால் பாதிப்பு

Photo: Twitter/ICC

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில், மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ் மற்றும் ரகீம் கொர்ன்வேல் ஆகியோர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக ஜேசன் ஹோல்டர் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் ஆரம்பம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு சவால் கொடுக்க தொடங்கினர். இதில், 45 ஓட்டங்களை கெயல் மேயர்ஸ் பெற்றிருந்த போதும், தனன்ஜய டி சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து பிரவீன் ஜயவிக்ரம ஜேசன் ஹோல்டரின் (36 ஓட்டங்கள்), விக்கெட்டினை வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

எனினும், அடுத்ததாக களமிறங்கிய ரகீம் கொர்ன்வல் மற்றும் ஜசூவா டி சில்வா ஆகியோர் இலங்கை அணிக்கு சவால் கொடுக்க தொடங்கினர். எனவே, மதியபோசன இடைவேளையின் போது, மே.தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பின்னர் மதியபோசன இடைவேளைக்கு பின்னர் இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் அழைக்கப்பட, சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த ரகீம் கொர்ன்வல்  39 ஓட்டங்களுடன் வெளியேற்றப்பட்டார்.

இதேநேரம், போட்டியில் மழைக்குறுக்கிட்டதன் காரணமாக, இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்போது, மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர், தொடர்ந்தும் மழை குறுக்கிட்டு வந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.