July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெற்றிக் கொண்டாட்டத்தின் போது காலணியில் குளிர்பானம் அருந்திய ஆஸி. வீரர்கள்

டி-20 உலகக் கிண்ண வெற்றிக்குப் பின்னர் அவுஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி வீரர்களான மெத்யூ வேட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் சப்பாத்தில் குளிர்பானம் ஊற்றிக் குடித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

டி-20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சம்பியனாகத் தெரிவாகியது.

வெற்றிக்கு பின்னர் அவுஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கியமாக அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் மெத்யூ வேட் மற்றும் சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த சப்பாத்தில் குளிர்பானத்தை ஊற்றிக் குடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

எனவே இந்த வீரர்கள் மூவரும் சப்பாத்தில் குளிர்பானம் குடித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் இவ்வாறு சப்பாத்தில் குளிர்பானம் அருந்துவது அவுஸ்திரேலியாவுக்குப் புதிது கிடையாது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எப்-1 மோட்டார் கார் பந்தய வீரர் டேணியல் ரிக்கார்டோ இப்படித்தான் போட்டியில் வெற்றி பெற்றதும், சப்பாத்தைக் கழற்றி அதில் குளிர்பானத்தை ஊற்றிக் குடிப்பார். அதைத்தான் தற்போது அவுஸ்திரேலிய வீரர்கள் சிலர் செய்துள்ளனர்.