July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா!

Photo: Twitter/ICC

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சுப்பர் 12 சுற்று லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (07) நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான்நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நஜிபுல்லா சத்ரானின் அதிரடியான அரைசச்தத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சத்ரான் 73 ஓட்டங்களை எடுத்தார்.

நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி, குழு 2இல் இருந்து 2ஆவது அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் இந்திய அணி டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

இதேவேளை, குழு 1இல் இருந்து இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.