June 16, 2025 17:59:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இனவெறி குற்றச்சாட்டு: பிபிசி நிகழ்ச்சியில் இருந்து இங்கிலாந்து முன்னாள் வீரர் நீக்கம்

Photo:  Twitter/Michael Vaughan

இங்கிலாந்து வீரர் அஸீம் ரபீக் கொடுத்த இனவெறி குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் வோகன் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வோகன், பிபிசி 5 லைவ் இன் ‘தி டபர்ஸ் அண்ட் வோகன் கிரிக்கெட் நிகழ்ச்சியில் கடந்த 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளுக்கான விசேட ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் மீது இங்கிலாந்து வீரர்கள் இருவர் இனவெறி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இதில் 2009 ஆம் ஆண்டு யோர்க்சையர் கழகத்துடனான போட்டிக்கு முன்னர் மைக்கல் வோகன் தனக்கும் மற்ற வீரர்களுக்கும் எதிராக இனவெறிக் கருத்துக்களை தெரிவித்ததாக அந்தக் கழக வீரர் அஸீம் ரபீக் குற்றம் சுமத்தியிருந்தார். இதையடுத்து பிபிசி நிகழ்ச்சியில் இருந்து மைக்கல் வோகன் நீக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மைக்கல் வோகன் கருத்து தெரிவிக்கையில்,

10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்தும் எவரும் தவறு செய்யக்கூடியவர்கள், ஆனால் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அஸீம் ரபீக் அந்த நேரத்தில் தன்னை வருத்தப்படுத்த ஏதாவது சொல்லப்பட்டதாக நம்பினால், அதைத்தான் அவர் நம்புகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.