July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: தென்னாபிரிக்காவின் அரை இறுதி கனவை தகர்த்த இங்கிலாந்து!

Photo: Twitter/ICC

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் 39ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது.

இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி ரஸ்ஸி வென்டெர் டூசென், எய்டன் மார்க்ரம் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வென்டர் டுசென் 94 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 52 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இதையடுத்து தென்னாபிரிக்க அணி 131 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே அரை இறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம் டி-20 உலகக் கிண்ணத் தொடரில் குழு 1-இல் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.