July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபுதாபி டி-10 லீக்: சென்னை பிரேவ்ஸ் அணிக்கு சாமிக்க, மகீஷ் ஒப்பந்தம்

இந்த ஆண்டு அபுதாபி டி-10 லீக்கில் புதிதாக இணைந்து கொண்ட சென்னை பிரேவ்ஸ் அணிக்கு இலங்கை வீரர்களான சாமிக்க கருணாரத்ன மற்றும் மகீஷ் தீக்ஷனஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் சகலதுறை வீரரான சாமிக்க கருணாரத்ன மற்றும் சுழல் பந்து வீச்சாளரான மகீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் தற்போது நடைபெற்று வருகின்ற டி-20 உலகக் கிண்ணத்தில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, குறித்த இரண்டு வீரர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் இடம்பெற்ற வீரர்கள் ஏலத்தின் போது மராத்தா அராபியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இதேவேளை, இம்முறை அபுதாபி டி-10 லீக்கில் களமிறங்கவுள்ள சென்னை பிரேவ்ஸ் அணியில், நிகொலஸ் பூரான், யூசுப் பதான், டெரன் சமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அபுதாபி டி-10 லீக்கின் ஐந்தாவது சீசன் நவம்பர் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இலங்கையின் முன்னாள் சகல துறை வீரர் இசுரு உதான, பங்களா டைகர்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டார். அதேபோல, டெக்கன் கிளேடியேட்டர்ஸ் அணியும் வனிந்து ஹஸரங்கவை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது.

துஷ்மந்த சமீர மற்றும் தனஞ்சய லக்ஷான் ஆகிய இருவரும் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். உபுல் தரங்க மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகிய இருவரும் நொதர்ன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதுடன், 19 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான மத்தீஷ பத்திரன பங்களா டைகர்ஸ் அணியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.