Photo: Twitter/ICC
காயம் காரணமாக நடப்பு டி- 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் விலகியுள்ளார்.
டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று (26) இரவு நடைபெற்ற 19 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் சகல துறையிலும் பிரகாசித்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில், இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் காயம் தீவிரமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக லோக்கி பெர்குசன் நடப்பு டி- 20 உலக கிண்ணத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இத்தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் சபையும் உறுதி செய்துள்ளது.
எனவே, லோக்கி பெர்குசன் தொடரிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு மாற்று வீரராக ஆடம் மில்னேவை அணியில் சேர்க்க நியூசிலாந்து கிரிக்கெட் சபை ஐ.சி.சி.யிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கான அனுதியை ஐ.சி.சி.யின் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளது.