May 28, 2025 19:25:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியில் மீண்டும் களமிறங்கும் அஞ்சலோ மெத்யூஸ்

தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து சிறிது காலம் விலகியிருந்த அஞ்சலோ மெத்யூஸ், எதிர்வரும் காலங்களில் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

அஞ்சலோ மெத்யூஸ் கடந்த ஜுலை மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்தார். அப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தான் தயாராக இருப்பதாக அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கும், தேர்வாளர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை அணியில் தற்போதுள்ள அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான அஞ்சலோ மெத்யூஸுக்கு இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள டி- 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இலங்கையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் அஞ்சலோ மெத்யூஸ் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.