July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் ‘ஏ’ அணியின் விபரங்கள்

Photo: PCB

இலங்கைக்கு இம்மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் ஏ கிரிக்கெட் அணியின் விபரத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் இளம் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராள சவுத் சகீல் தலைமையில் 19 பேர் பாகிஸ்தான் ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடியுள்ள அப்துல்லாஹ் சபீக், அர்ஷாத் இக்பால், ஹைதர் அலி, நசீம் ஷா, உஸ்மான் சலாஹுதீன் மற்றும் சாஹிட் மஹ்மூத் ஆகிய வீரர்கள் இலங்கை வரும் பாகிஸ்தான் ஏ கிரிக்கெட் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், அடுத்த வருடம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண போட்டிகளை இலக்காகக் கொண்டு இளம் விக்கெட் காப்பாளர் சல்மான் கான் மற்றும் முன்வரிசை வீரரான காசீம் அக்ரம் ஆகிய இருவரும் பாகிஸ்தான் ஏ கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்றுள்ள 19 வீரர்களில், 14 பேர் இருவகை தொடர்களுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஓமைர் பின் யூசுப், உஸ்மான் சலாஹுதீன், அஹ்மட் சாபி அப்துல்லாஹ் ஆகியோர் இலங்கை ஏ அணிக்கெதிராக நடைபெறவுள்ள நான்கு நாட்கள் கொண்ட போட்டிளுக்கு மாத்திரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,

ஒக்டோபர் 21 ஆம் திகதி பாகிஸ்தான் அணி இலங்கையை வந்தடையவுள்ளது.

அதன்பின்னர், ஒக்டோபர் 28ஆம் திகதி முதலாவது நான்கு நாள் போட்டியும்,  நவம்பர் 4 ஆம் திகதி இரண்டாவது நான்கு நாள் போட்டியும் ஆரம்பமாகவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

அதனைத்தொடர்ந்து நவம்பர் 10, 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.