![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/sri-lanka-team-3.jpg?fit=800%2C450&ssl=1)
ஓமானில் வீசிய சஹீன் சூறாவளி காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் ஓமான் சுற்றுப்பயணம் தாமதமாகியுள்ளது.
இதன்படி ஒருநாள் தாமதமாகி இன்று பிற்பகலே அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
டி-20 உலகக் கிண்ணம், ஓமான் அணியுடனான இரண்டு டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்காக தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணி நேற்று காலை ஓமான் புறப்பட்டுச் செல்லவிருந்தது.
எனினும், ஓமானில் வீசிய சஹீன் சூறாவளி காரணமாக அந்தப் பயணம் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், சூறாவளி எச்சரிக்கைகளுக்கு மத்தியில் இன்று பிற்பகல் அணியினர் ஓமானுக்கு பயணமாகியுள்ளனர்.
இலங்கை – ஓமான் அணிகள் இடையிலான தொடர் இம்மாதம் 7ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் மஸ்கட் நகரில் நடைபெறவுள்ளது.
ஓமான் அணியுடனான போட்டிகளை அடுத்து, டி-20 உலகக் கிண்ணத்திற்கான இரண்டு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
அதன் பின்னர், டி-20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் எதிர்வரும் 18 ஆம், 20 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் நபீமியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது