July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் திடீர் விலகல்

Chris Gayle.(File Photo: IANS)

Photo: IPL

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் திடீரென அறிவித்துள்ளார்,

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 4 வெற்றிகள், 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இனிவரும் அனைத்து போட்டிகளும் பஞ்சாப் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.

இந்தநிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரானகிறிஸ் கெய்ல் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேற்கிந்திய தீவுகள் அணி, கரீபியன் பிரிமியர் லீக் தொடர் மற்றும் ஐ.பி.எல் தொடரில் கொவிட்-19 கட்டுப்பாடு வலயத்துக்குள் (பயோ-பபுள்) இருந்துள்ளதால் மனரீதியில் புத்துணர்வு பெறும் நோக்கில் இந்த முடிவுவை அவர் எடுத்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த உள்ளேன் என்றும், இதனால், நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுகிறேன் என்றும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்துவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் கிறிஸ் கெய்ல்  விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.