July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: பிளே–ஒப் சுற்றுக்கு முதல் அணியாக டெல்லி அணி தகுதி

ஐ.பி.எல் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வரும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 16 புள்ளிகளுடன் பிளே–ஒப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று (25) அபுதாபியில் நடைபெற்ற 36 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 33 ஓட்டங்களால் டெல்லி அணி வீழ்த்தியது.

இதன்மூலம், டெல்லி அணி, தனது 7 ஆவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

டெல்லி அணி, இதுவரை விளையாடிய 10 போட்டிகளில், 8 இல் வெற்றி, 2 இல் தோல்வி என, 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

இதன்மூலம் இம்முறை ஐ.பி.எல் தொடரில் ‘பிளே–ஒப்’ சுற்றுக்கான இடத்தை முதல் அணியாக டெல்லி  உறுதி செய்தது.

அதேவேளையில், இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணிக்கு இது 4 ஆவது தோல்வியாகும்.

இது இவ்வாறிருக்க, நேற்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற 37 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் 5 ஓட்டங்களால் திரில் வெற்றியீட்டிய பஞ்சாப் அணி, நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருந்து 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மறுபுறத்தில் 9 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பிளே-ஒப் வாய்ப்பை இழந்தது.