July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சம்சனுக்கு மீண்டும் அபராதம்

Photo: Twitter/ IPL

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவர் சஞ்சு சம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 36 ஆவது லீக் போட்டி நேற்று (25) அபுதாபியில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், அணியில் விளையாடிய வீரர்களுக்கு தலா 6 இலட்சம் ரூபா அல்லது தனிநபர் போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

எனவே இது இரண்டாவது முறை. இந்த சீசனில் மீண்டுமொரு முறை ராஜஸ்தான் அணி இதே தவறை செய்தால், அந்த அணியின் தலைவர் சஞ்சு சம்சனுக்கு 36 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும்.