July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்சிபி அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோஹ்லி

Photo: IPL /Twitter

டி-20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்திய டி-20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த விராட் கோஹ்லி, தற்போதைய ஐபிஎல் சீசனுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் நேற்று முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகின.

இந்த நிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று இரவு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

இதனிடையே, அந்த அணியின் தலைவர் விராட் கோஹ்லி, நடப்பு ஐபிஎல் தொடருடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பதிவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

”ஆர்சிபி அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு துடுப்பாட்ட வீரராக அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக வழங்குவேன்.” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, ஆர்சிபி அணியின் தலைவராக இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆர்சிபி அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக விராட் கோலி அறிவித்திருந்தாலும், ஐபிஎல் போட்டிகளில் இறுதி வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.