July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் தொடரிலிருந்து இங்கிலாந்தின் மூன்று வீரர்கள் திடீர் விலகல்

இங்கிலாந்து அணியின் முன்னணி நட்சத்திரங்களான ஜோனி பெயர்ஸ்டோ, டேவிட் மலான், மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூன்று வீரர்களும் ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது முக்கியமான போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற இருந்தபோது கொரோனா தாக்கம் காரணமாக போட்டி கைவிடப்பட்டது.

இந்தப் போட்டியை இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகு நடத்தலாம் என இங்கிலாந்து கிரிக்கட் சபை விருப்பம் தெரிவித்து இருந்தாலும், இந்திய கிரிக்கெட் சபை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதால் 5 ஆவது போட்டியில் விளையாட முடியாது என இந்திய அணி நிர்வாகம் உறுதிபட தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் மூன்று வீரர்கள் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜோனி பெயர்ஸ்டோ, டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிறிஸ் வோக்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் டேவிட் மலான் ஆகியோர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இந்த நிலையில், டாவிட் மலானுக்கு பதிலாக தென்னாபிரிக்காவின் எய்டம் மார்க்ரமை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.