July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுடனான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று 2 ஆவது போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, பின்னர் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்தது.

எனவே, 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி டுவிட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில்,

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணிக்கு மற்றுமொரு வெற்றி கிடைத்துள்ளது.

இலங்கை அணி மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஒரு சிறந்த செயல்திறனுக்கான அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. இது எங்களுக்கு பெருமை அளிக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் ஒருநாள் தொடர் வெற்றிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.