June 15, 2025 20:29:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையுடனான தொடரிலிருந்து தென்னாபிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா விலகல்

Photo: Sri Lanka Cricket

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து தென்னாபிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா விலகியுள்ளார்.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெபெற்ற இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, அவரது பெருவிரலில் காயம் ஏற்பட்டிருந்தது.

போட்டியின் 26 ஆவது ஓவர் வீசப்பட்டுக்கொண்டிருந்தபோது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த, இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க விக்கெட்டை நோக்கி பந்தை வீசியிருந்தார்.

தன்னை நோக்கிவந்த பந்தை தடுக்கமுயன்றபோது, இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மைதானத்திலிருந்து வெளியேறிய அவர், மீண்டும் துடுப்பெடுத்தாட வரவில்லை.

இந்த நிலையில், அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையை அடுத்து அவர் இலங்கையுடனான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி மீண்டும் தென்னாபிரிக்கா பயணமாகவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையுடனான எஞ்சிய போட்டிகளில் தென்னாபிரிக்க அணித் தலைவராக கேஷவ் மகராஜ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.