July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 இல் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக சஹிட் அப்ரிடி அறிவிப்பு

அடுத்தவருடம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சஹிட் அப்ரிடி  தெரிவித்துள்ளார்.

அப்ரிடி கடைசியாக 2016 இல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார்.அதன்பிறகு பாகிஸ்தான் சுப்பர் லீக், லங்கா பிரீமியர் லீக், காஷ்மீர் பிரீமியர் லீக் உள்ளிட்ட பல்வேறு டி-20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

இதனிடையே,பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி, அடுத்த வருடத்துடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இதுவரை மூன்று அணிகளில் விளையாடிய அப்ரிடி, அடுத்த வருடம் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

தற்போது விளையாடி வருகின்ற முல்தான் சுல்தான்ஸ் அணி எனக்கு அனுமதி தந்தால், குவெட்டா அணி உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்தால் அடுத்த வருடம் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாடுவேன் என சஹிட் அப்ரிடி கூறியுள்ளார்.

41 வயதான சஹிட் அப்ரிடி,பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.