![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/misbah.jpg?fit=1024%2C702&ssl=1)
Photo: Pakistan Cricket Twitter
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியினர் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று லாகூருக்குப் புறப்பட்டனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியினருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர் மட்டும் ஜமைக்காவில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் ஜமைக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விசேட வைத்தியர் ஒருவரின் மேற்பார்வை கீழ் கண்காணிக்கப்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.