June 17, 2025 9:01:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக்கில் வடமாகாண வீரர்கள்

இலங்கையில் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள லங்கன் பிரமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு வடமாகாண வீரர்கள் மூவர் தெரிவாகியுள்ளனர்.

கனகரத்தினம் கபில்ராஜ், தெய்வேந்திரம் டினோஸன், விஜயகாந்த் வியாஸ்கான் ஆகிய மூவருக்கே இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

எல்.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு வீரர்களை பட்டியலிடும் செயற்பாடு திங்கட்கிழமை இரவு இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

தெய்வேந்திரம் டினோஸன்

இதன்போது ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக அந்த மூன்று வீரர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் வடக்கின் பெருஞ் சமர் கிரிக்கெட் தொடரில் விளையாடி திறமையை வெளிப்படுத்தியவர்கள்.

கபில்ராஜும் டினோஸனும் சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். வியாஸ்காந்த் யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்தவராவார்.

கனகரத்தினம் கபில்ராஜ்

இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியில் திசர பெரேரா, டாவிட் மாலன், வனிந்த ஹசரங்க, சொஹைப் மாலிக், அவிஸ்க பெர்னாண்டோ உள்ளிட்ட புகழ் பெற்ற வீரர்கள் பலரும் அங்கம் வகிக்கின்றனர்.

எல்.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் ஜப்னா ஸ்டேலியன்ஸ், தம்புள்ள ஹவ்க்ஸ், கென்டி டஸ்கர்ஸ், களம்புகிங்ஸ், கால் கிளெடியேடர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடவுள்ளன.

விஜயகாந்த் வியாஸ்காந்த்

உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திர வீரர்களான மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல், ஆன்ரே ரஸல், தென் ஆபிரிக்காவின் பெப் டு பிலெசி, பாகிஸ்தான் முன்னாள் வீரர் சஹிட் அப்ரிடி உள்ளிட்ட பலரும் எல்.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.