July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்த இந்திய கிரிக்கெட் அணியில் மேலும் இருவருக்கு கொவிட் தொற்று!

Photo: Sri Lanka Cricket

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான யுஸ்வேந்திர சஹால் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய வீரர்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் காணப்பட்ட வீரர்களில் ஒருவரான குர்ணால் பாண்டியா கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை அடுத்து, அவருடன் நெருங்கிப் பழகியதாக கூறப்பட்ட எட்டு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த எட்டு வீரர்களில் உள்ளடங்கியிருந்த யுஸ்வேந்திர சஹால் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய வீரர்களுக்கே தற்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதனை அடுத்து குறித்த வீரர்கள் இருவரும் ஏற்கனவே குர்ணால் பாண்டியாவுடன் நிலைமை சரியாகும் வரையில் இலங்கையில் தங்கவைக்கப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதனிடையே, இலங்கை சுற்றுப்பயணத்தில் டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களை நிறைவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரினை 2-1 எனக் கைப்பற்றிய நிலையில், டி-20 தொடரினை 1-2 என பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.