![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/WhatsApp-Image-2021-07-08-at-19.11.58.jpeg?fit=1024%2C571&ssl=1)
ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் நடைபெற ஒரு நாளே உள்ள நிலையில் அதன் தொடக்க விழா நிகழ்வின் பணிப்பாளர் கென் டாரோ கொபாயாஷி அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நகைச்சுவை கலைஞரான கோபாயாஷி 23 வருடங்களுக்கு முன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் யூத இன படுகொலையை சுட்டிக் காட்டி நகைச்சுவை செய்ததாக கூறப்படுகிறது.
23 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவர் இவ்வாறு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோபாயாஷி, “நகைச்சுவை என்பது பிறரை துன்புறுத்துவதாக இருக்கக்கூடாது. அந்த சமயத்தில் நான் பயன்படுத்திய வார்த்தை தவறானது.அதற்காக நான் வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை மூன்று பேர் பதவி விலகி உள்ளனர்.