May 31, 2025 20:07:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை-இந்திய தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள், டி-20 தொடர்களுக்கான நடுவர்கள் குழுவை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டு போட்டிகளுக்கும் ஐந்து நடுவர்கள் மற்றும் இரண்டு போட்டி மத்தியஸ்தர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் ஐ.சி.சி.யின் பிரதான நடுவர் குழாத்தின் முக்கிய உறுப்பினராக உள்ள குமார் தர்மசேன இலங்கை, இந்திய தொடரில் பிரதான நடுவராக செயல்படவுள்ளார்.

அத்துடன், ருச்சிர பல்லிய குருகே, ரவீந்திர விமலசிறி, லிண்டன் ஹெனிபல் மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் நடுவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான தொடரில் போட்டி மத்தியஸ்தர்களாக ரஞ்சன் மடுகல்லவும், கிரஹம் லாப்ரோய்யும் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.