October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பதற்கு ரொஷான் மஹானாமா பொருத்தமானவர்’:முரளி

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரொஷான் மகாநாமாவை நியமிக்க வேண்டும் என்று முத்தையா முரளிதரன் பரிந்துரைத்துள்ளார்.

இலங்கை அணியின் தற்போதையை நிலைமையை மாற்றியமைக்க கூடிய ஒரே மனிதர் அவர்தான் என்றும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக நான் விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் பேசினேன்.ரொஷான் மகாநாமா இதைப் பற்றி சிந்திக்க நேரம் வேண்டும் என்று கூறினார்.ஆனால் இது எனது தனிப்பட்ட கருத்து.இலங்கை கிரிக்கெட் சபை இந்த விடயம் தொடர்பில் என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ள மகாநாமா, மிக்கி ஆர்தருக்கு மாற்றாக கருதப்படுகிறார்.மஹாநாமா நியமிக்கப்பட்டால் தற்போதைய இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஷ்திரிக்கு ஒத்த பாத்திரத்தை அவரால் வகிக்க முடியும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.