May 31, 2025 13:03:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் முத்தையா முரளிதரன்!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி (குருதிக்குழாய் சீரமைப்பு ) சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அப்பலோ வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைக்காக சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டுள்ளார்.

இந்த நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக முத்தையா முரளிதரன்  அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது இரத்த குழாய் ஒன்றில் ஏற்பட்டிருந்த அடைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, முத்தையா முரளிதரன் நலமாக இருப்பதாகவும், சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது எனவும், அவர் சிகிச்சை பெற்ற அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, முரளிதரன் நலமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் அவர் மீண்டும் இணைந்துகொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.