June 17, 2025 5:41:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முத்தையா முரளிதரன் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான முத்தையா முரளிதரன், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.