July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வயது பிரச்சினை காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டது

photo-srilankacricket.lk

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்,பங்களாதேஷ் அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நிறைவடையும் வரை செலுத்துவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா தடுப்பூசி 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில்,இலங்கை அணியில் உள்ள பெரும்பான்மையான வீரர்கள் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.