June 3, 2025 1:06:23

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொந்த மண்ணில் தடுமாறும் இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி தடுமாற்றமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

பின்வரிசை வீரர்களால் மேலும் 23 ஓட்டங்களையே பெற்றுக்கொடுக்க முடிந்தது. அதன் பிரகாரம் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 578 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.

முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ரோஹித் சர்மா, அணித்தலைவர் விராத் கோஹ்லி, அஜின்கெயா ரஹானே ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

செட்டிஸ்வர் புஜாரா 73 ஓட்டங்களையும், ரிஷப் பான்ட் 91 ஓட்டங்களையும் பெற்று அணியின் மானத்தை காத்தனர். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்களை பெற்றிருந்த போது மூன்றாம் நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது.

வொஷிடன் சுந்தர் 33 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் டொம் பெஸ் 4 விக்கெட்டுகளையும், ஜொப்ரா ஆச்சர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.