June 16, 2025 15:08:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரொனால்டோவுக்கு எதிராக விசாரணை

உலகப் புகழ்பெற்ற நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக இத்தாலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி இத்தாலியில் பயணம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணித்தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இத்தாலியின் ஜுவான்டஸ் கழக அணிக்காக விளையாடுகிறார். இத்தாலியில் தங்கியுள்ள அவர் தனது காதலியின் பிறந்த நாளுக்காக துரின் நகரிலிருந்து சுமார் 150 கிலோ மீற்றர் தூரம் பயணித்திருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.