May 16, 2025 2:35:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல்.தொடர் நடைபெறும் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவு

ஐ.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை தொடரை மாற்ற வேண்டி ஏற்பட்டால் அதற்கான மாற்றிடமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஐ.பி.எல்.லின் 14 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியாவில் நடத்துவதற்கே ஏற்பாட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தமுறை ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன் பிறகே தொடரை எங்கு நடத்துவதென தீர்மானி க்கப்படவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை தொடரை சீராக நடத்த முடியுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு சிக்கல்கள் ஏதும் நடந்தால் தொடரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.