October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னையில் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன. முதல் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இங்கிலாந்து குழாத்தினர் சென்னையை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியுடன் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததும் பயிற்சிகளுக்கு திரும்பவுள்ளார்கள்.