July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செல்சி கழகத்தின் புதிய முகாமையாளராக தோமஸ் துச்செல் நியமிக்கப்பட்டுள்ளார்

செல்சி கால்பந்தாட்ட அணியின் புதிய முகாமையாளராக தோமஸ் துச்செல் நியமிக்கப்பட்டுள்ளார்.

18 மாத ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர் செல்சியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய முகாமையாளர் துச்செல் நேற்றே பயிற்றுவிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதோடு, முதலாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் வரை பிரான்ஸின் பிஸ்ஜி கழகத்தின் முகாமையாளராக துச்செல் செயற்பட்டிருந்தார்.

பிஸ்ஜி அணியின் வெற்றிகளிலும் முன்னேற்றத்திலும் அவர் பெரிதும் பங்காற்றியுள்ளார்.

செல்சி அணி முகாமையாளர் பதவியிலிருந்து ப்ரேங்க் லெம்பார்ட் திடீரென நீக்கப்பட்டதை அடுத்தே, தோமஸ் துச்செல் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

துச்செல் செல்சி அணியின் 11 ஆவது முகாமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.