July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து அணியுடனான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய குழாம் அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளுக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணித்தலைவர் விராத் கோலி அணிக்கு திரும்பியுள்ளார்.

அவர் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது முதல் போட்டியுடன் மனைவிக்கு பிரசவம் நடைபெறவுள்ளதால் நாடு திரும்பினார். விராத் கோலிக்கு பெண் குழந்தை பிறந்ததும் நினைவுகூரத்தக்கது.

எவ்வாறாயினும், தமிழக வீரரான நடராஜனுக்கு இந்தக் குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை. உபாதைக்குள்ளான சிரேஸ்ட வீரர்கள் குணமடைந்துள்ளதால் நடராஜனின் வாய்ப்பு பறிபோயுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது உபாதைக்குள்ளாகி விலகிக்கொண்ட ஜஸ்பிரிட் பும்ரா, லோகேஸ் ராகுல் ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும், லோகேஸ் ராகுலின் உடற்றகுதி பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவருக்கு வாய்ப்பளிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.

அஜின்கெயா ரஹானே, ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயன்க் அகர்வால், செட்டிஸ்வர் புஜாரா, விருத்மான் சாஹா, ஹர்திக் பாண்ட்யா, ரிஸப் பாண்ட், இஸாந்த் சர்மா, முகமது ஸிராஜ், ஸர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், வொஸிங்டன் சுந்தர், அக்சார் பட்டேல் ஆகியோரும் இந்திய குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.