July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை புரிந்த இந்திய அணிக்கு 5 கோடி ரூபா பரிசு அறிவிப்பு

அவுஸ்திரேலியா மண்ணில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை புரிந்த இந்திய அணிக்கு 5 கோடி ரூபா பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.

முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்டு  இந்திய அணி அவுஸ்திரேலியா மண்ணில் பெற்ற வெற்றி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

இதனால் இந்த வெற்றிக்குக்காக இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபா பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.