October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இறுதி நொடியில் கோலடித்த ரொனால்டோ

இத்தாலி கழக மட்டக் கால்பந்தாட்டத் தொடரில் சசுசோலோ அணிக்கு எதிரான போட்டியில் ஜுவான்டஸ் கழக அணி 3-1 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியில் முதல் பாதி இரண்டு அணிகளும் கோல் போடாத நிலையில் முடிவடைந்தது.

ஆனாலும், இரண்டாம் பாதியில் சசுசோலோ அணி வீரரான ஒபெய்ங் கோலொன்றைப் போட்டார். அத்துடன். விதிமுறையை மீறிய குற்றத்துக்காக நடுவரால் அவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஜுவான்டஸ் அணி 50 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடைந்தது. டனிலோ அந்த கோலை அணிக்குப் பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 82 ஆவது நிமிடத்தில் ரம்ஸே கோலடிக்க ஜுவான்டஸ் அணி இரண்டாவது கோலை எட்டியது.

90 நிமிடங்கள் முடிந்து உபாதைக்கான சொற்ப நேரத்தில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கோலடிக்க ஜுவான்டஸ் அணியின் கோல் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. சசுசோலோ அணியால் மேலதிகமாக கோல் போட முடியவில்லை.