![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-07-at-10.40.38-PM.jpeg?fit=1024%2C538&ssl=1)
ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும், பார்ஸிலோனா கழக அணியின் நட்சத்திர வீரருமான லியோனஸ் மெஸி அபாரமாக இரண்டு கோல்களைப் போட்டு அசத்தியுள்ளார்.
ஸ்பெய்னின் லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் அத்லடிகோ பில்பாவோ கழக அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த இரட்டை கோலைப் பதிவுசெய்தார். இதன்மூலம் 3-1 எனும் கோல் கணக்கில் பார்ஸிலோனா கழக அணி வெற்றியீட்டியது.
போட்டியில் முதல் பாதியில் 2-1 எனும் கோல் கணக்கில் பார்ஸிலோனா கழக அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் 62 ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் போட்ட மெஸி, ரசிகர்களின் ஏகபோக ஆதரவை பெற்றார். இந்தப் போட்டிகளில் அவர் இதுவரை12 கோல்களைப் போட்டுள்ளார்.
லா லீகா கால்பந்தாட்டத் தொடரில் அத்லடிகோ அணி முதலிடத்தை வகிக்கிறது. அவர்கள் 15 போட்டிகளில் 12 வெற்றிகளுடன் 38 புள்ளிகளைப் பெற்று முதலிடம் வகிக்கின்றார்கள்.