October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரிலிருந்து ராகுல் விலகல்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாத்திலிருந்து நட்சத்திர துடுப்பாட்ட வீரரான கே.எல் ராகுல் விலகியுள்ளார்.

சிட்னியில் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இரண்டு அணிகளின் வீரர்களும் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கே.எல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அவரது இடது கையின் மணிக்கட்டில் காயமேற்பட்டுள்ளது. இது தொடர்பான பரிசோதனையில் அவர் காயத்திலிருந்து மீண்டுவர இன்னும் 2 வாரங்கள் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் கே.எல் ராகுல் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஏற்கனவே உமேஸ் யாதவ், மொஹமட் சமி ஆகியோர் உபாதை காரணமாக நாடு திரும்பினர். அணித்தலைவர் விராத் கோஹ்லியும் ஓய்வில் இருப்பதால் சமபலம் குன்றிவரும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.