June 13, 2025 10:06:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

Photo: Facebook/ Sri Lanka Cricket

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை வந்தடைந்தது.

இங்கிலாந்தில் இருந்து விசேட விமானத்தின் மூலம் கிரிக்கெட் அணி வீரர்கள் அடங்கலாக 44 பேர் இன்று முற்பகல் அம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தை வந்தடைந்ததும், அவர்கள் என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் யாருக்கும் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய அவர்கள் அனைவரையும் அம்பாந்தோட்டையில் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் காலத்தை பூரணப்படுத்திய பின்னர், அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்‌ஷ  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளதுடன், அதனை தொடர்ந்து காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியினர் விளையாட உள்ளனர்.

இதன் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.