July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறிய இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் ஐந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறி மெல்பேர்ன் உணவகமொன்றிற்கு குறித்த வீரர்கள் சென்றமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ரோகித் சர்மா, சுப்மன் கில், பிரித்விசா, ரிசாப் பன்ட், நவ்தீப் சைனி ஆகிய வீரர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என இந்திய அணியின் முகாமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் விதிமுறைகள் மீறப்பட்டனவா என்பது குறித்து இரு அணிகளும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது என கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடைக்கால நடவடிக்கையாக இந்திய- அவுஸ்திரேலிய மருத்துவ குழுக்களின் ஆலோசனையின்படி ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புதுவருட தினத்தன்று ஐந்து வீரர்களும் உணவகமொன்றில் காணப்படும் புகைப்படத்தை இந்திய அணியின் ஆதரவாளர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.