July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரோஹித் சர்மாவுக்கு உபதலைவர் பொறுப்பு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளுக்கான உபதலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர தலைவராக விராத் கோஹ்லியும், உபதலைவராக அஜின்கெயா ரஹானேவும் உள்ளனர். எனினும், மனைவிக்கு தலைப்பிரசவம் என்பதால் விராத் கோஹ்லி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பிவிட்டார்.

இதனால் இரண்டாவது போட்டியில் அஜின்கெயா ரஹானே அணித்தலைவராக செயற்பட்டதுடன், அந்தப் போட்டியை இந்தியா வெற்றிகொண்டது. மூன்றாவது போட்டி சிட்னியிலும், நான்காவது போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளன.

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் உபதலைவராக ரோஹித் சர்மா செயற்படவுள்ளார். இரண்டாவது போட்டியில் அந்தப் பொறுப்பை செட்டிஸ்வர் புஜாரா வகித்தமை நினைவுகூரத்தக்கது.

ரோஹித் சர்மா உபாதை காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை இழந்ததுடன் அதன் பிறகு சுயதனிமைப்படுத்தலில் இருந்ததால் அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தனிமைப்படுத்தல் காலம் முடிந்து இந்திய அணியுடன் இணைந்துள்ள அவர் இந்நாட்களில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.