February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு பயணமாகிறது இங்கிலாந்து

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் இங்கிலாந்து குழாம் எவ்வித சிக்கலுமின்றி பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போதிலும் அப்போது ஏற்பட்ட கொரோனா அபாயத்தால் டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டு இங்கிலாந்து அணி திரும்பிச் சென்றது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான இங்கிலாந்து குழாம் 3 ஆம் திகதி சொந்த மண்ணிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனையில் அனைவருக்கும் நெகடிவ் சான்றிதழ் வந்துள்ளது. அதன்படி இங்கிலாந்து குழாம் இலங்கைக்கு விஜயம் செய்து 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவுள்ளது. அதன் பிறகு முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.