October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து – தென்ஆபிரிக்க ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் சிலருக்கும் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் தொடர் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.

எனினும் அப்போது நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் வீரர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டு போட்டி மூன்று நாட்களுக்கு பிற்போடப்பட்டது. இரண்டாவது போட்டி 6 ஆம் திகதி நடைபெறவிருந்ததுடன், வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததால் அதனையும் நடத்த முடியவில்லை.

இந்நிலையில் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட முதல் போட்டியை நடத்த முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து சர்வதேச ஒருநாள் தொடரை பிற்போடுவது என இரண்டு கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்துள்ளன.