October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்.பி.எல்; அரை இறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியது ஜப்னா ஸ்டாலியன்ஸ்

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

காலி மற்றும் கண்டி அணிகள் தோல்வியடைந்ததன் மூலம் ஜப்னா, கொழும்பு, தம்புள்ள அணிகளின் அரை இறுதி வாய்ப்பு உறுதியானது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் இந்தத் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ், தம்புள்ள வைகிங், கொழும்பு கிங்ஸ், கண்டி டஸ்கர்ஸ், காலி கிலெடியேடர்ஸ் ஆகிய 5 அணிகள் மோதுகின்றன. இந்த ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் தலா 2 போட்டிகளில் மோதும்.

அந்தப் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் ஜப்னா, கொழும்பு, தம்புள்ள அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களை வகிக்கின்றன.

இந்த அணிகளுக்கு மேலும் தலா 3 போட்டிகள் எஞ்சியுள்ளன. என்றாலும், கண்டி மற்றும் காலி ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி அரைஇறுதிக்கு தெரிவாகும் என்பது உறுதியில்லாமல் இருக்கிறது.

கண்டிக்கு இன்னும் 2 போட்டிகளே எஞ்சியுள்ளதுடன், 6 போட்டிகளில் 5 தோல்விகளுடன் 2 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தில் இருக்கிறது. விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள காலி அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

எனவே, கண்டி, காலி அணிகளில் கூடுதல் வெற்றியைப் பெறும் அணிகளில் ஒன்று நான்காவது அணியாக அரை இறுதிக்கு முன்னேறும்.